செல்போனை பார்த்து இளைஞர் செய்த பொருள்? - விரைந்து மக்கள் செய்த செயல்

Update: 2024-04-26 09:46 GMT

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். டாஸ்மாக் கடை அருகில் உள்ள மேம்பாலத்தில் இருந்து பெட்ரோல் குண்டு வீசியது போன்று சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், கக்கன் நகரை சேர்ந்த இளைஞர் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செல்போன் பார்த்து அதை செய்ததாக கூறியுள்ள அந்த இளைஞர் மது போதையில் இருப்பதால், விசாரணையில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்