"ஓராண்டுக்கு ஒரு பிரதமர்" - இந்தியா கூட்டணி மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Update: 2024-04-25 02:51 GMT

ஓராண்டுக்கு ஒரு பிரதமர் எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்த, இந்திய கூட்டணி திட்டமிட்டுள்ளதாக, பிரதமர் நரேந்திரமோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் ஹார்தாவில் நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரசார பொது கூட்டத்தில் பேசிய அவர், தனது வாக்கு வங்கியை மகிழ்விப்பதற்கு காங்கிரஸ் கட்சி எத்தகைய எல்லைக்கும் செல்லும் என்றார். காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் ஒருவருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட கார், பைக்,

வீடு இருந்தால் பறிமுதல் செய்யப்பட்டு விடும் என குற்றம் சாட்டினார். அதோடு, ஓராண்டுக்கு ஒரு பிரதமர் என்னும் திட்டத்தை உருவாக்குவது குறித்து இந்திய கூட்டணி விவாதித்து வருவதாகவும் கூறினார். ஓராண்டுக்கு ஒரு பிரதமர் எனும் திட்டத்தை நடைமுறைப்படுத்தினால், உலகம் நம்மை பார்த்து ஏளனம் செய்யும் என குற்றம் சாட்டினர். பிரதமர் நாற்காலியில் ஏலம் விடுவதிலேயே அவர்கள் மும்முறமாக இருப்பார்கள் என்றும் மோடி தெரிவித்தார்

Tags:    

மேலும் செய்திகள்