ஜோதிமணிபிரச்சாரத்தில் மயங்கி விழுந்த பெண்...முதலுதவி செய்த காங்கிரஸ் தொண்டர்கள்..! | Congress

Update: 2024-03-29 02:35 GMT

கரூரில், காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி பிரச்சாரத்தின்போது பெண் ஒருவர் திடீரென மயங்கி விழுந்தார். கரூர் கோடங்கிபட்டி பகுதியில் அமைந்துள்ள பட்டாளம்மன் கோயிலில் ஜோதிமணி வழிபாடு நடத்திவிட்டு பிரச்சாரத்தை தொடங்கினார். அவருக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்தனர். தொடர்ந்து, திறந்த வேனில் பிரச்சாரம் செய்த ஜோதிமணி, தொகுதியில் செய்த திட்டங்களை எடுத்துரைத்து வாக்கு சேகரித்தார். இதனிடையே, பிரச்சாரத்தில் கலந்து கொண்ட 40 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர், வெயிலின் தாக்கம் தாங்காமல் திடீரென மயங்கி விழுந்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்