"மூன்று, நான்கு நபர்களுக்காக மட்டுமே இயங்கும் அரசு" - மத்திய அரசு மீது ராகுல்காந்தி குற்றச்சாட்டு

மத்திய அரசு மூன்று, நான்கு நபர்களுக்காக மட்டுமே இயங்கி வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Update: 2020-12-24 13:37 GMT
மத்திய அரசு மூன்று, நான்கு நபர்களுக்காக மட்டுமே இயங்கி வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி குடியரசுத் தலைவரை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவசர நாடாளுமன்ற கூட்டத் தொடரைக் கூட்டி 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்றார்.
விவசாயிகளுக்கு முன்னால் எந்த சக்தியும் நிற்காது என குறிப்பிட்ட ராகுல்,  யாரை சமூக விரோதிகள் என அழைக்கிறார்களோ அவர்கள் தான் இந்த நாட்டின் வளத்தை செழிப்பாக வைத்துக் கொள்பவர்கள் என்றார். மோடியின் நிலைபாட்டுக்கு எதிரான முடிவை மோகன் பகவத் எடுத்தாலும் கூட அவர் தீவிரவாதியாக தான் சித்தரிக்கப்படுவார் என்றும் ராகுல்காந்தி விமர்சித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்