"கொரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்த வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்" - பிரதமர் மோடிக்கு மம்தா பானர்ஜி வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசியை வாங்கவும் அதை பயன்படுத்தவும் வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-08-11 16:31 GMT
கொரோனா தடுப்பூசியை வாங்கவும், அதை பயன்படுத்தவும் வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். கொரோனா வைரஸ் நிலவரம் குறித்து, பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, கொரோனா தடுப்பூசியை வாங்கி பயன்படுத்த வழிகாட்டுதல்களை உடனடியாக மத்திய அரசு  வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்