தாத்தா காமராஜர் நினைவிடத்தை பார்த்த பேத்தி கமலிகா... உடனே முதல்வருக்கு வைத்த கோரிக்கை

Update: 2024-05-02 03:07 GMT

மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் நினைவிடத்தை பராமரிக்க வேண்டும் என நாடார் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

சென்னை கிண்டியில் உள்ள காமராஜர் நினைவிடம் முறையாக பராமரிக்கப்படவில்லை என புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், நாடார் சங்க கூட்டமைப்பு தலைவர் மின்னல் ஸ்டீபன், தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்து ரமேஷ், அகில இந்திய நாடார் மகாஜன சபை தலைவர் கார்த்திகேயன், ஹரி நாடார், காமராஜரின் பேத்தி கமலிகா உள்ளிட்டோர் காமராஜர் நினைவிடத்திற்கு சென்றனர். நினைவிடத்தை பார்வையிட்ட நாடார் சங்க நிர்வாகிகள், காமராஜர் நினைவிடம் முறையாக பராமரிக்கப்படவில்லை எனவும், முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்