கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை - காணொலிக் காட்சி மூலம் டெல்லி முதல்வர் பேச்சு

கொரோனாவுக்கு எதிரான போரை ஒன்றாய் இணைந்து வெல்வோம் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

Update: 2020-03-28 02:58 GMT
லாஸ் ஏஞ்சல்ஸ், ரோம் உள்ளிட்ட 35 உலக மாநகரங்களின் தலைவர்கள், கொரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அனுபவங்களை காணொலிக் காட்சி மூலம் பகிர்ந்து கொண்டனர். அதில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கொரோனாவுக்கு எதிரான போரை ஒன்றாய் இணைந்து வெல்வதற்கு, சர்வதேச நாடுகளுடன் தோள் கொடுக்க உறுதியாக உள்ளோம் என்றார். மேலும் கொரோனா தொற்று உள்ளவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருவதாகவும் கொரோனா நோய்த்தொற்றுக்கும் பட்டினிக்கும் உயிர் பலி ஏற்படதா வகையில் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உள்ளதாகவும் அவர், தெரிவித்தார். இதனிடையே டெல்லியில் மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகளுக்கு, உலக மாநகரங்களின் தலைவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்