"தேர்தல் அலுவலர் மீது வழக்கு தொடருவோம்" - திமுக வேட்பாளர் ​செந்தில் பாலாஜி எச்சரிக்கை

திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்திற்கு உரிய அனுமதி வழங்கவில்லை என்றால், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-16 13:17 GMT
திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரத்திற்கு உரிய அனுமதி வழங்கவில்லை என்றால், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்கு தொடருவோம் என அரவக்குறிச்சி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளர் செந்தில் பாலாஜியை, ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் நாளை பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக திமுக தரப்பில் 12 இடங்களில் பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டு ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, நான்கு இடங்களில் மட்டும் பிரசாரம் செய்ய தேர்தல் நடத்தும் அலுவலர் மீனாட்சி அனுமதி அளித்துள்ளதாக கூறினார். 
Tags:    

மேலும் செய்திகள்