கம்யூனிஸ்ட் மூத்த தலைவருக்கு அரசு வீடு ஒதுக்க வேண்டும் - திருமாவளவன்

கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு, அரசு சார்பில் வீடு ஒதுக்கி தர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார்.

Update: 2019-05-12 04:29 GMT
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு, அரசு சார்பில் வீடு ஒதுக்கி தர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 12 ஆண்டுகளாக தமிழக அரசின் குடியிருப்பில் குறைந்த வாடகையில் குடியிருந்த வந்த அவருக்கு  எந்தவொரு இடத்தையும் வழங்கமால் இடம் பெயரச் செய்தது தவறானது என கூறியுள்ளார். நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவரும், அப்பழுக்கற்ற பொதுவாழ்வுக்கு சொந்தக்காரருமான நல்லகண்ணுவுக்கு, அரசு சார்பில் வீடு ஒன்றை உடனடியாக ஒதுக்கித் தருமாறு தமிழக அரசை கேட்டுக் கொள்வதாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்