"பிரதமரின் சாதி குறித்து இன்று வரை எனக்கு தெரியாது" - பிரியங்கா காந்தி

வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகளை மட்டுமே காங்கிரஸ் எழுப்பும் என்று கிழக்கு உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-28 12:55 GMT
வளர்ச்சி தொடர்பான பிரச்சனைகளை மட்டுமே காங்கிரஸ் எழுப்பும் என்று கிழக்கு உத்தர பிரதேசத்தின் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பாக்ரெய்ச் பகுதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியின் சாதி குறித்து காங்கிரஸ் ஒருபோதும் விவாதத்தை எழுப்பியதில்லை என்றும், பிரதமர் மோடியின் சாதி குறித்து தனக்கு இன்று வரை தெரியாது என்றும் கூறினார். அண்மையில் பிரசாரத்தில் பேசிய மோடி, தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்த்தவன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்