ரபேல் விவகாரம் : "நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை வேண்டும்" - ஸ்டாலின்

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-20 12:25 GMT
ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், ரபேல் போர் விமானம் கொள்முதல் தொடர்பாக  பத்திரிக்கையில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டியுள்ளார். எதிர்கட்சிகள் பொய் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றன என்ற ஆதாரமற்ற பிரச்சாரத்தை பிரதமர் மோடி கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  நாட்டின் பாதுகாப்பில் பிரதமருக்கு அக்கறை இருக்குமானால் ரபேல் போர் விமானப் பேரம் குறித்து உடனடியாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்