விஜயபாஸ்கர் பதவியில் நீடிப்பது அவமானம் - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்

சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள விஜயபாஸ்கர் இருப்பது தமிழகத்திற்கே பெரும் அவமானம் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2018-12-06 21:16 GMT
காமராஜரும், கக்கனும் வீற்றிருந்த அமைச்சர் நாற்காலியில், சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கியுள்ள விஜயபாஸ்கர் இருப்பது தமிழகத்திற்கே பெரும் அவமானம் ஆகும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை விடுத்துள்ளார். மேலும் விஜயபாஸ்கரை தமிழக அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உடனடியாக நீக்க வேண்டும் என்றும், குட்கா ஊழல் வழக்கை விரைவாக நடத்தி குற்றம் செய்தவர்களுக்கு சிபிஐ தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும் ராமதாஸ் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்