நிவாரண உதவி வழங்கிய தி.மு.க எம்.எல்ஏ

திருச்சி மாவட்டம் திருவெறும்பூரில் புயல் பாதித்த இடங்களை பார்வையிட்ட தி.மு.க எம்.எல்.ஏ அன்பில் மகேஷ், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கினார்.

Update: 2018-11-21 04:19 GMT
புயல் பாதிப்பால் இறந்த ஆட்டோ ஓட்டுநரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, அவர்களுக்கு நிதி உதவி செய்தார். திருச்சி திமுக அலுவலகமான அறிவாலயத்தில் இருந்து, நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கு தண்ணீர், பிஸ்கட், போர்வை, மருந்து உள்ளிட்ட பொருட்களை லாரியில் அனுப்பி வைத்தார். 
Tags:    

மேலும் செய்திகள்