மாமியார் வீட்டுக்கு சென்ற கணவன்.. - `தீ' வைத்து கொளுத்திய மனைவி..

Update: 2024-05-04 15:14 GMT

சின்னகம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த முத்துக்குமார் மற்றும் சசிகலாவுக்கு 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆன நிலையில், கருத்து வேறுபாட்டால் 2 ஆண்டுகளுக்கு முன், சசிகலா தன் தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தனது மனைவியை அழைத்து வர, முத்துக்குமார் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், சசிகலா மற்றும் அவரின் தாயாரான சின்ன பாப்பா சேர்ந்து முத்துகுமாரின் இருசக்கர வாகனத்தின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொளுத்தினர். இதில் இருசக்கர வாகனம் முற்றிலுமாக எரிந்து சேதமானது.

Tags:    

மேலும் செய்திகள்