"தினகரனால் ஒருபோதும் அதிமுகவை கைப்பற்ற முடியாது" - பன்னீர்செல்வம்

தினகரனால் ஒருபோதும் அதிமுகவையும், இரட்டை இலையையும் கைப்பற்ற முடியாது என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Update: 2018-10-20 20:19 GMT
அதிமுகவின் 47-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பன்னீர்செல்வம், அதிமுகவை அபகரிக்க, ஒரு குடும்பம் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். முதலமைச்சர் பதவியை தனதாக்கிக் கொள்ள தினகரன் முயற்சி செய்ததாகவும், அவரால் ஒருபோதும் இரட்டை இலையும் அதிமுகவையும் கைப்பற்ற முடியாது என்றும் தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்