பிரதமர் மோடியுடன் முதலமைச்சர் பழனிசாமி சந்திப்பு

டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் எடப்பாடி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

Update: 2018-10-08 05:46 GMT
பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேற்று மாலை விமானம் மூலம் டெல்லி சென்ற முதலமைச்சர் பழனிசாமியை அதிமுக எம்பிக்கள் வரவேற்றனர். இதையடுத்து, தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த முதலமைச்சர் பழனிசாமி, இன்று காலை பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.  இந்த சந்திப்பின்போது, முதலமைச்சர் பழனிசாமியுடன் அமைச்சர் ஜெயக்குமார், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோரும் உடன் இருந்தனர். எய்ம்ஸ் உள்ளிட்ட தமிழக திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. 

இந்த சந்திப்பை தொடர்ந்து, டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் அதிமுக எம்பிக்களுடன் முதலமைச்சர் பழனிசாமி இன்று பிற்பகலில் ஆலோசனை நடத்த இருக்கிறார். அதன்பிறகு, இன்று இரவு அவர் சென்னை திரும்புகிறார். 





Tags:    

மேலும் செய்திகள்