அழகிரிக்கு ஆதரவு தெரிவித்த திமுக நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கம் - அன்பழகன் அறிவிப்பு
அழகிரிக்கு ஆதரவு தெரிவித்துள்ள, திமுக நிர்வாகி ஒருவர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்
நாளை நடைபெற உள்ள கருணாநிதி நினைவேந்தல் பேரணியில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்த அழகிரியை, சென்னை வேளச்சேரி கிழக்குப் பகுதி செயலாளர் ரவி தனது ஆதரவாளர்களுடன் சென்று வரவேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரவி, திமுகவில் ஜனநாயகம் இல்லை என குற்றம்சாட்டியிருந்தார். இந்தநிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதற்காக ரவியை தற்காலிகமாக நீக்குவதாக திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார்.