கண்ணில் பட்டவர்களுக்கு எல்லாம் கத்தி குத்து... சென்னையில் நடந்த பயங்கரம்...அதிரடி காட்டிய போலீஸ்

Update: 2024-04-26 03:37 GMT

சென்னை ஆவடி அருகே கஞ்சா போதையில் ரகளையில் ஈடுபட்டு, தட்டிக் கேட்ட பெண் உட்பட கண்ணில்பட்டவர்களையெல்லாம் கத்தியால்தாக்கிவிட்டு தப்பிய 2 பேரை அரைமணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.

திருமுல்லைவாயல் கணபதி நகரை சேர்ந்த ஆனந்தனுக்கு சொந்தமான வீட்டில் நண்பர்களுடன் தங்கி முத்து என்பவர் அம்பத்தூரில் வெல்டிங் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கஞ்சா போதையில்இருந்த முத்து அவரது நண்பர்கள் செல்போனில் தகாத வார்த்தைகளில் சத்தமாக பேசிக் கொண்டிருந்துள்ளனர். இதனைக் கண்டித்த பெண்ணை முத்து அவரது நண்பர்கள் கத்தியால் வெட்டி உள்ளனர். தடுக்க வந்தவர்களையும் வீடுபுகுந்து சரமாரியாகத் தாக்கி உள்ளனர்.

தொடர்ந்து, அந்தப் பகுதியில் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பட்டாகத்தியால் வெட்டிவிட்டு தப்பியோடினர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஏரி பகுதியில் தலைமறைவாக இருந்த இருவரை மடக்கிபிடித்து கைதுசெய்தனர்.

போதையில் பொதுமக்களைத் தாக்கியது சரித்திர பதிவேடு குற்றவாளிகளான அபினேஷ் மற்றும் விஷ்ணு என்பது விசாரணையில் தெரியவந்தது. ஏ கேட்டகிரி ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்த முத்து என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Tags:    

மேலும் செய்திகள்