தடம் பார்க்கும் நிகழ்வு..மீண்டும் எழுந்தருளிய கள்ளழகர்

Update: 2024-04-26 02:49 GMT

சித்திரை திருவிழாவின் 7-ஆம் நாள் நிகழ்வில், கள்ளழகர் திவான் இராமராயர் மண்டபத்தில் இருந்து அனந்தராயர் பல்லக்கில் தல்லாகுளம் நோக்கி புறப்பட்டார். அவருக்கு ஒவ்வொரு மண்டகப்படிகளிலும் சிறப்பு தீபாரதனை காட்டப்பட்டது. கள்ளழகர் வைகையாற்றுக்குள் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய பகுதியில், ராஜாங்க அலங்காரத்தில், அனந்தராயர் பல்லக்கில் மீண்டும் எழுந்தருளினார். அப்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க கையில் சர்க்கரை தீபம் ஏந்தி சாமி் தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்