"கர்ப்பமாக்கி ஏமாற்றிய போலீஸ்".. கர்ப்பிணி பெண் புகார்.. உடனே ஆக்சன் எடுத்த டிஐஜி

Update: 2024-04-26 03:02 GMT

காரைக்குடியில் கர்ப்பமாக்கி ஏமாற்றியதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், காவல் சார்பு ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து ராமநாதபுரம் டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல்லைலைச் சேர்ந்த லெட்சுமி என்பவர், காரைக்குடி மகளிர் காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து திடீரென்று போராட்டம் நடத்தினார். அவர் 7 மாத கர்ப்பமாக இருப்பதாகவும், அதற்கு காரைக்குடி தெற்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சிவக்குமார்தான் என்றும் அவர் கூறினார். எனவே, சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்நிலையில், சிவக்குமாரை சிவக்குமாரை பணியிடை நீக்கம் செய்து இராமநாதபுரம் டிஐஜி உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்