அதிமுக-வை உடைக்க சிலர் திட்டமிடுகிறார்கள் - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் அருகே ரூ.30 லட்சம் மதிப்பில் பூங்கா, உடற்பயிற்சிகூடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

Update: 2018-09-01 07:21 GMT
சேலம் அருகே ரூ.30 லட்சம் மதிப்பில் பூங்கா, உடற்பயிற்சிகூடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பேளூரில் பேசிய முதலமைச்சர், அதிமுகவை உடைக்க வேண்டும் எனவும், ஆட்சியை கவிழ்க்க வேண்டும் எனவும் சிலர் நினைப்பதாக கூறினார். மக்கள் மற்றும் தொண்டர்கள் ஆதரவு உள்ளவரை அதிமுகவை யாரும் தொட்டு பார்க்க முடியாது என்றும் தெரிவித்தார். நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி அறிவிக்கும் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்