மதுரையில் தாயுடன் தூங்கி கொண்டிருந்த குழந்தை கடத்தல்.. 24 மணி நேரத்தில் - பெரும் பரபரப்பு

Update: 2024-04-26 06:26 GMT

மதுரையில், தாயுடன் தூங்கிக்கொண்டிருந்த 6 மாத பெண் குழந்தை கடத்தப்பட்ட புகாரில் 24 மணிநேரத்திற்குள் துரிதமாக செயல்பட்டு பெண் குழந்தையை மீட்ட போலீசார், குழந்தை கடத்தலில் ஈடுபட்ட இரு பெண்களை கைது செய்தனர். நாங்குனேரியைச் சேர்ந்த சுந்தரி என்பவர் தனது குழந்தைகளுடன் மதுரை ரயில் நிலைய வளாகத்தில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை எழுந்து பார்த்தபோது தனது 6 மாத குழந்தை சக்திபிரியாவை காணவில்லை என தாய் புகாரளித்தார். சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, குழந்தை கடத்திய செந்தாமரை மற்றும் மகேஸ்வரி ஆகிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்