லாரியை மடக்கிய நாம் தமிழர் கட்சியினர் - அதிரடியாக இறங்கிய ஆணையர்

Update: 2024-04-25 09:19 GMT

கேரளாவில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மீன்கழிவுகளை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரியை நாம் தமிழர் கட்சியினர் மடக்கி பிடித்தனர். இன்று காலை குமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதி வழியாக வந்த கர்நாடக பதிவெண் கொண்ட கண்டெய்னர் லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியதால் அதனை நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மடக்கி பிடித்தனர். அதில் மீன்கழிவுகள் இருந்ததால் உடனடியாக குழித்துறை நகராட்சி ஆணையருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த நகராட்சி ஆணையர் கழிவுகள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரிக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து கேரளாவிற்கு திருப்பி அனுப்பி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்