ஊதிய உயர்வு கொடுக்காததால் மேனேஜர் முன் ஊழியர் செய்த தரமான சம்பவம்..

Update: 2024-04-27 05:23 GMT

ஊதிய உயர்வு கொடுக்காததால் மேனேஜர் முன் ஊழியர் செய்த தரமான சம்பவம்.."Resign பண்ணா இப்படியும் பண்ணலாமா" - வைரலாகும் காட்சிகள்

புனேவில் ஊதிய உயர்வு தராத நிறுவனத்தில் இருந்து விலகியதை, ஊழியர் ஒருவர் இசைக்குழுவுடன் இணைந்து மகிழ்ச்சியுடன் கொண்டாடிய சம்பவம் அரங்கேறி உள்ளது. பல ஆண்டுகளாக ஊதிய உயர்வு தராமல் இருந்ததால் கடும் அதிருப்தியில் இருந்த அங்கித், பணியில் இருந்து விலகுவதை ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாட முடிவெடுத்தார். இதையடுத்து தனது நண்பர்கள் மற்றும் இசைக்குழுவை அழைந்த அன்கித், நிறுவனத்தின் மேலாளர் முன்பு வாசலில் மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி கொண்டாடினார். இதனால் எரிச்சலடைந்த நிறுவனத்தின் மேலாளர், அங்கித் மற்றும் குழுவினரை கலைந்து செல்லுமாறு எச்சரித்தார். இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்