"10,11,12ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும்"

புதுச்சேரியில்,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-11 10:20 GMT
புதுச்சேரியில்,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். தனியார் பள்ளியில் 15 முதல் 18 வயதுள்ள சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை துணை நிலை ஆளுநர் தமிழிசை நேரில் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுவையில் 15 முதல்18 வயதுடைய 83 ஆயிரம் சிறார்களில், 31 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட்டதாக கூறினார். எஞ்சியவர்களுக்கு 3 3 நாட்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என கூறிய அவர், முதலமைச்சரும், தானும் இணக்கமாக பேசி மக்கள் நலத்திட்டங்களில் ஈடுபடுவதாக கூறினார் .

Tags:    

மேலும் செய்திகள்