போதைப் பொருள் வழக்கில் தொடரும் அதிரடி - அனன்யா பாண்டேவின் செல்போன் பறிமுதல்

போதைப் பொருள் வழக்கில் நடிகை அனன்யா பாண்டேவின் செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-10-23 03:28 GMT
போதைப் பொருள் வழக்கில் நடிகை அனன்யா பாண்டேவின் செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பொருட்களை பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாரூக்கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக நடிகை அனன்யா பாண்டேவும் விசாரணை வளையத்திற்குள் வந்தார். நேற்று அவரிடம் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியதோடு அவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதனிடையே அனன்யா பாண்டேவின் செல்போன் மற்றும் லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டு அதில் உள்ள தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. தனக்கு கஞ்சா வேண்டும் என ஆர்யன் கானிடம் அனன்யா கேட்டது தொடர்பான ஆதாரம் வெளியான நிலையில் இதுகுறித்த கேள்வி முன்வைக்கப்பட்டது. அப்போது, கேலியாக நாங்கள் இருவரும் பேசிக் கொண்டது என்று அனன்யா தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்