பவுர்ணமி நிலவொளியில் தாஜ்மகாலை ரசிக்க அனுமதி

பவுர்ணமி நிலவொளியில் தாஜ்மஹாலின் அழகை காண இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-21 12:43 GMT
பவுர்ணமி நிலவொளியில் தாஜ்மஹாலின் அழகை காண இரவு நேரங்களில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளுக்கு பவுர்ணமி நிலா வெளிச்சத்தில் தாஜ்மஹாலை பார்ப்பது புதுவிதமான அனுபவமாக இருக்கும் என தொல்லியல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பவுர்ணமியை முன்னிட்டு,  நாளை வரையிலான டிக்கெட் அனைத்தும் விற்று தீர்ந்தன. இரவு நேரங்களில் தாஜ்மஹாலை பார்வையிட அனுமதி கொடுக்கும் போது, ஐந்து பிரிவாக நேர ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்