கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 8 பேர் பலி - தேவையான உதவிகள் செய்வதாக பிரதமர் உறுதி

உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழையால் 8 பேர் உயிரிழந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் தொலைப்பேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

Update: 2021-10-19 10:16 GMT
உத்தரகண்ட் மாநிலத்தில் கனமழையால் 8 பேர் உயிரிழந்த நிலையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் தொலைப்பேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார். உத்தரகண்ட்டில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் பெருமழையால் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கனமழையால் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட இதுரை 8 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. பெரும்பாலான சாலைகளில் நீர் சூழந்ததுடன், சில பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தன. இந்த நிலையில் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி, தேவையான உதவிகள் செய்வதாக உறுதி அளித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்