"அஜய் மிஸ்ரா மகனை கைது செய்யாதது ஏன்?" - பிரியங்கா காந்தி கேள்வி
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலக வேண்டும் என பிரியங்கா காந்தி வலியுறுத்தியுள்ளார். வன்முறை சம்பவத்தில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், பலியானவர்களின் குடும்பத்தினர் இழப்பீட்டை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என கூறினார். மேலும், மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா பதவி விலகவில்லை என்றால், பலியான விவசாயிகளுக்கு நீதி கிடைக்காது என பிரியங்கா காந்தி குறிப்பிட்டார்.