மனநலன் பாதிக்கப்பட்ட தந்தை வெறிச்செயல்: மனைவி, குழந்தையை கத்தியால் குத்திய கணவர்

கேரளா மாநிலம் கண்ணூரில் இளைஞர் ஒருவர் தனது 9 மாத குழந்தை மற்றும் மனைவியை கத்தியால் சரமாரியாக தாக்கி விட்டு அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-09-25 06:18 GMT
கேரளா மாநிலம் கன்ணூரிலுள்ள எருவேசி  குடியான்மலை சுண்டக்குன்னு பகுதியை  சேர்ந்த சதீசன்  என்பவர் மனநல பிரச்சனைகளுக்காக  கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை தனது தாயரை ஒரு அறையில் வைத்து பூட்டி விட்டு தனது 9 மாத குழந்தையை கத்தியால் சரமாரியாக தாக்கியுள்ளார். இதனை பார்த்த மனைவி அஞ்சு தடுக்க முயன்ற போது அஞ்சுவையும் கத்தியால் தாக்குகுத்தியுள்ளார். இதில் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. பின் சதீசன் அந்த கத்தியை கொண்டு தனது கழுத்தை தானே அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அஞ்சுவின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் மீட்டு அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்