"அரசு பங்குகள் செப். 17-இல் ஏலம்" - மத்திய அரசு அறிவிப்பு

அரசு பங்குகளை ஏலம் விடுவதற்கான அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Update: 2021-09-14 04:52 GMT
2023 ஆம் ஆண்டு அரசு பங்கில் 4 புள்ளி இரண்டு ஆறு சதவீதத்தை 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கும், 2031ஆம்ஆண்டு அரசு பங்கில் 6 புள்ளி1 சதவீதத்தை 14 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் ஏலம் விடுவதற்கான அறிவிப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதேபோல் 2061 ஆம்ஆண்டு அரசு பங்கில் 6 புள்ளி ஏழு ஆறு சதவீதத்தை 9 ஆயிரம் கோடி ரூபாக்கும் ஏலம் விடவும் திட்டமிட்டுள்ளது. இந்த ஏலங்கள் மும்பையில் ரிசர்வ் வங்கியால் செப்டம்பர் 17 ஆம் தேதி நடத்தப்படவுள்ளது. வெற்றிகரமாக ஏலம் எடுத்தவர்கள் அதற்கான கட்டணத்தை செப்டம்பர் 20 ஆம் தேதி செலுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்