வீட்டிலும் முக கவசம் அணியுங்கள் - மக்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

வீட்டில் இருக்கும்போதும் மக்கள் முக கவசம் அணியவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

Update: 2021-04-27 07:21 GMT
வீட்டில் இருக்கும்போதும் மக்கள் முக கவசம் அணியவேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மத்திய அரசின் நிதி ஆயோக் உறுப்பினரும், மருத்துவருமான வி.கே. பால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தொற்று பரவல் அதிகரித்து வருவதால், வீட்டிலும் முக கவசம் அணிவது நல்லது என்றும், அவசியமின்றி வீட்டிற்கு விருந்தினர்களை அழைக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்