சூளூர்பேட்டை பகுதியில் ரூ.33 லட்சம் பறிமுதல் - போலீசார் விசாரணை

திருப்பதி நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே 33 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-04-16 05:38 GMT
திருப்பதி நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான பிரசாரம் முடிவடைந்த சில மணி நேரங்களிலேயே 33 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி நாடாளுமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைந்த நிலையில், போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சூளூர்பேட்டை பகுதியில் சென்ற காரை சோதனையிட்ட போலீசார் அதில்  கட்டுக்கட்டாக இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்,. காரை ஓட்டி வந்த நபரிடம் எந்த ஆவணமும் இல்லாததால் காரில் இருந்த 33 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை போலீசார் கைப்பற்றினர்,. இதனைத்தொடர்ந்து  வாக்காளர்களுக்கு வினியோகம் செய்வதற்காக இந்த பணம் கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,.
Tags:    

மேலும் செய்திகள்