மூளைச்சாவு அடைந்த நபரின் இதயத்தை ஆளில்லா மெட்ரோ ரயிலில் கொண்டு சென்று மருத்துவர்கள்

தெலங்கானாவில் மூளைச்சாவு அடைந்த நபரின் இதயத்தை ஆளில்லா மெட்ரோ ரயிலில் கொண்டு சென்று மருத்துவர்கள் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.

Update: 2021-02-03 04:59 GMT
தெலங்கானா மாநிலம் வாராங்கலை சேர்ந்த விவசாயி நரசிம்மா ரெட்டி, விபத்து ஒன்றில் சிக்கி மூளைச்சாவு அடைந்தார். ஹைதராபாத்தில் எல்.பி நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்தனர். இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நபருக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது. சாலை வழியாக செல்வது சவாலானது என அறிந்த மருத்துவர்கள், மெட்ரோ ரயில் நிர்வாகத்தை நாடினர். அதற்கான அனுமதி கிடைக்க, மருத்துவமனையில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம், அங்கிருந்து பயணிகள் இல்லாத மெட்ரோ ரயில் மூலம் 30 நிமிடங்களில் உடல் உறுப்புகளை எடுத்து சென்றனர். இதையடுத்து உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்