திருட முயன்ற கேரள இளைஞர்களுக்கு அடி உதை - மக்களே விரட்டி பிடித்து தாக்கியதில் ஒருவர் மரணம்

திருச்சியில் திருட முயன்ற கேரள இளைஞர்களை பொதுமக்கள் விரட்டி பிடித்து தாக்கியதில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2020-12-26 11:08 GMT
திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள அல்லூரில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவரது வீட்டுக்கு சுவர் ஏறிக் குதித்த 2 திருடர்களை பார்த்து அவர் கூச்சலிடவே, அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மடக்கி பிடிக்க முயன்றனர். அப்போது வந்த திருடர்களில் ஒருவன் கத்தியை வைத்து மிரட்டியதால் பொதுமக்கள் அவர்களை மடக்கிபிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் போலீசில் இருவரும் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவர்கள் கேரள மாநிலத்தை சேர்ந்த தீபு மற்றும் அரவிந்த் என தெரியவந்தது. பொதுமக்கள் தாக்கியதில் பலத்த காயமடைந்த தீபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்