உயிரிழந்த கொரோனா முன்கள பணியாளர்களுக்கு கவுரவம்: வாரிசுகளுக்கு, மருத்துவ படிப்பில் உள் ஒதுக்கீடு - மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா தடுப்புப் பணியின் போது உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு, மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது.
கொரோனா தடுப்புப் பணியின் போது உயிரிழந்தவர்களின் குழந்தைகளுக்கு, மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு முன்வந்துள்ளது. இதன்படி, வார்ட்ஸ் ஆஃப் கோவிட் வாரியர்ஸ் எனும் தனிப்பிரிவை உருவாக்கி, மத்திய தொகுப்பிலிருந்து ஐந்து இடங்கள் ஒதுக்கப்படுகிறது. கொரோனா தடுப்பில் தன்னலமின்றி பணியாற்றி மறைந்த முன்களப் பணியாளர்களின் தியாகத்தைப் போற்றும் விதமாக இந்த முடிவை எடுத்துள்ளதாக, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.