நாராயண் அக்‌ஷர்தாம் கோவில் அக்.13 முதல் திறப்பு - கோவில் நிர்வாகம் அறிக்கை

டெல்லியில் உள்ள நாராயண் அக்‌ஷர்தாம் கோவில் அக்டோபர் 13 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது.

Update: 2020-10-05 02:46 GMT
டெல்லியில் உள்ள நாராயண் அக்‌ஷர்தாம் கோவில், அக்டோபர் 13 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது. இது குறித்து அந்த கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை 
ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. கண்காட்சி மண்டபம் மூடப்பட்டிருக்கும், என்றும், இசை நீரூற்று மட்டுமே திறந்திருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக கவசம் அணிந்து வருவது கட்டாயம் மற்றும் தெர்மல் ஸ்கேனிங் செய்யப்படும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


Tags:    

மேலும் செய்திகள்