நிலத்தகராறு காரணமாக இருதரப்பினர் இடையே மோதல் - படுகாயம் அடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதி

ஆந்திர மாநிலத்தில் நிலத்தகராறு காரணமாக இரண்டு தரப்பை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் மோதிக்கொண்டதில் 16 பேர் படுகாயம் அடைந்தனர்

Update: 2020-08-01 08:11 GMT
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அனுமந்தபுரம் பகுதியில் எம்எல்ஏ தரப்பினருக்கும் மற்றொரு தரப்பினருக்கும்  நீண்ட நாட்களாக நிலத் தகராறு இருந்து வந்துள்ளது. தற்போது இந்த நில தகராறு நீதிமன்றத்தில் வழக்காக உள்ள நிலையில் , எம்எல்ஏ தரப்பினர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்ய சென்றுள்ளனர், அதனை மற்றொரு தரப்பினர் தடுத்து நிறுத்த முயற்சித்த போது கடும் மோதல் ஏற்பட்டுள்ளது, நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒருவரை ஒருவர் கட்டையால் தாக்கி கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது, அப்போது அவர்கள் ஒருவர் மீது ஒருவர் மிளகாய் பொடிகளையும் தூவிக்கொண்டனர், அதில் பாடுகாயம் அடைந்த 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்