மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஓபிசி இடஒதுக்கீடு - பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்

மருத்துவ மாணவர் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு , காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார்.

Update: 2020-07-03 12:00 GMT
மருத்துவ மாணவர் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்ட  மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு , காங்கிரஸ் இடைக்கால தலைவர்  சோனியா காந்தி கடிதம் எழுதி உள்ளார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறும்  மருத்துவ மாணவர் சேர்க்கையில், இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுவதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு என தனியாக இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேற்படிப்புகளில் இடம் கிடைப்பதில்லை என்றும் எனவே உரிய இட ஒதுக்கீடு அளிக்குமாறும் சோனியா காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்