கொரோனாவால் உயிரிழந்த இளைஞர் இறப்பதற்கு முன் வெளியிட்ட செல்பி வீடியோ

தெலங்கானா மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியான இளைஞர் இறப்பதற்கு முன் வெளியிட்ட செல்பி வீடியோ நெஞ்சை பதறவைக்கிறது.

Update: 2020-06-30 03:53 GMT
தெலங்கானா மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியான இளைஞர் இறப்பதற்கு முன் வெளியிட்ட செல்பி வீடியோ நெஞ்சை பதறவைக்கிறது.மேட்சல்  மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது உடல்நிலை  நலிவடைந்தது. இந்த நிலையில் இறப்பதற்கு முன் அவர் வெளியிட்ட செல்பி வீடியோ, நெஞ்சை உறையவைக்கிறது. மூன்று மணி நேரமாக எனக்கு சுவாசிப்பது கடினமாக உள்ளது. ஆனால் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனக்கு மூச்சு திணறுகிறது. பை டாடி, அனைவருக்கும் பை என்று பேசி வெளியிட்டுள்ள வீடியோ, கல்நெஞ்சையும் உருக வைக்கிறது. 
Tags:    

மேலும் செய்திகள்