புதுச்சேரியில் 75 வயது மூதாட்டிக்கு கொரோனா...

புதுச்சேரி மாநிலம் மாஹே அடுத்த பள்ளூர் பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-03-17 18:55 GMT
புதுச்சேரி மாநிலம் மாஹே அடுத்த பள்ளூர் பகுதியை சேர்ந்த 75 வயது மூதாட்டிக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அபுதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோழிக்கோடு விமானம் நிலையம் வழியாக மாஹே வந்தார். கடும் காய்ச்சல் மற்றும் சளி தொல்லையால் அவதிப்பட்ட அவரை பரிசோதித்த மாஹே மருத்துவர்கள், ரத்த மாதிரிகளை கோழிக்கோடுக்கு பரிசோதனைக்கு அனுப்பினர். அங்கு மூதாட்டியின் ரத்த பரிசோதனையில், கொரோனா இருப்பதை உறுதி செய்ததை தொடர்ந்து, மாஹே மருத்துவமனையில், அவரை தனியறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்