கொரோனா அச்சம் : பங்குச் சந்தைகள் தொடர் சரிவு - முதலீட்டாளர்களுக்கு 6 நாட்களில் 10 லட்சம் கோடி இழப்பு
இந்திய பங்குச் சந்தைகளில் தொடர் சரிவு காரணமாக கடந்த 6 நாட்களில் முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய பங்குச் சந்தைகளில் தொடர் சரிவு காரணமாக கடந்த 6 நாட்களில் முதலீட்டாளர்களுக்கு 10 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா தாக்கம் காரணமாக உலக அளவிலான வர்த்தகம் மோசமடைந்துள்ளதால், பங்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தையின் சந்தை மதிப்பு 148 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது. ஆசிய நாடுகள் தவிர ஜெர்மனி, பிரான்ஸ் என ஐரோப்பிய நாடுகளுக்கும் கோரோனா பரவியுள்ளதால், முதலீட்டாளர்கள் பங்குச் சந்தைகளில் இருந்து வெளியேறி வருகின்றனர்.