போராட்டத்தில் குதித்த ஒப்பந்த ஊழியர்கள்... அண்ணா பல்கலை. வளாகத்தில் பரபரப்பு

Update: 2024-05-01 05:46 GMT

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் தற்காலிக பணியாளர்கள் திடீர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒப்பந்த முறையிலான பணி நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தற்காலிக ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி துணை வேந்தர், பதிவாளர் ஆகியோர், ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு இது குறித்து நல்ல முடிவு எடுக்கப்படும் என உத்தரவாதம் அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்