Tiruvallur | "தனியார் துறைமுகத்தால் கடல் நாசமா போகுது"-இறந்து கரை ஒதுங்கும் கடல் உயிரினங்கள்
தனியார் துறைமுகத்தால் கடற்கரையில் மண்அரிப்பு - மீனவர்கள் குற்றச்சாட்டு
திருவள்ளூர் மாவட்டம் காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும் தனியார் துறைமுகம், கடலுக்குள் கெமிக்கல் (Chemical) கலந்த ராட்சத பாறைகளை கொட்டுவதால் மண் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீர் நில பரப்பை நோக்கி முன்னேறுவதாக மீனவ மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் ஏராளமான மீன்கள் மற்றும் ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இதனால் தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.