சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்ட 406 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என உறுதி

சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்டு டெல்லி அருகே முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 406 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என சோதனையில் தெரியவந்துள்ளது.

Update: 2020-02-16 16:20 GMT
சீனாவில் இருந்து அழைத்து வரப்பட்டு டெல்லி அருகே முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 406 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என சோதனையில் தெரியவந்துள்ளது. வூஹான் நகரில் இருந்து, இரண்டு விமானங்கள் மூலம், கடந்த, 1 மற்றும் 2-ம் தேதிகளில், 650 பேர், இந்தியா அழைத்து வரப்பட்டனர். இவர்களில் 406 பேர் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அவர்கள் திங்கள் கிழமை முதல் முகாமில் இருந்து அனுப்பப்படுவார்கள் என கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்