துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞர்கள் - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

டெல்லியில் பட்டப்பகலில் கடை முன் இருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-02-08 04:07 GMT
டெல்லியில் பட்டப்பகலில் கடை முன் இருவர் துப்பாக்கியால் சுட்ட சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  ஜாபராபாத் பகுதியில் உள்ள ஒரு கடை முன் பைக்கில் வந்த இருவர், மற்றொருவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதை தொடர்ந்து அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்கில் பறந்து சென்றனர். இது குறித்த புகாரைத்தொடர்ந்து, அங்குள்ள சிசிடிவி காட்சியில் பதிவான காட்சிகளை வைத்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்