நோபல் பரிசு பெற்ற அறிஞர் தடுத்து நிறுத்தம் - படகில் மனைவியுடன் சிக்கி தவித்த மைக்கேல் லெவிட்

நோபல் பரிசு பெற்ற வேதியியல் அறிஞர் மைக்கேல் லெவிட் பல்கலை. நிகழ்ச்சி ஒன்றிற்காக கேரளா வந்துள்ளார்.

Update: 2020-01-09 03:51 GMT
நோபல் பரிசு பெற்ற வேதியியல் அறிஞர் மைக்கேல் லெவிட், பல்கலை. நிகழ்ச்சி ஒன்றிற்காக, கேரளா வந்துள்ளார். இந்நிலையில், தனது மனைவியுடன், ஆலப்புழாவிற்கு சுற்றுலா சென்றிருந்தார். கேரளாவில் முழு அடைப்பு என்பதால் அவரது படகு வீட்டை, கரை திரும்பவிடாமல் சிலர் தடுத்ததால், படகிலிருந்து வெளியேற முடியாமல் தவித்தார். பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, இச்சம்பவத்திற்கு பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள், சமூக விரோதிகள் என குறிப்பிட்டுள்ள கேரள சுற்றுலா துறை அமைச்சர், அவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்