ப. சிதம்பரம் கைது வேதனை அளிக்கிறது - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கருத்து

ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2019-08-22 18:54 GMT
ஐ. என். எக்ஸ் மீடியா வழக்கில் ப. சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிப்பதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டி உள்ளார். கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நமது நாட்டில் ஜனநாயக முறை நசுக்கப்பட்டு வருகிறது என்றார். ப. சிதம்பரம் ஒரு பொருளாதார நிபுணர் என குறிப்பிட்ட அவர், கைது செய்யப்பட்டவவிதம் மிகவும் தவறானது என கூறினார். ஆனால், அவரை நீதித்துறை, காப்பாற்ற முன்வரவில்லை என்றும் மம்தா பானர்ஜி வேதனை தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்