தொடரும் சாலை விதிமீறல்கள் : 4 மாதங்களில் ரூ.48 லட்சம் அபராதம் வசூல்

புதுச்சேரியில் சாலை விதிமீறல் அபராதமாக கடந்த 4 மாதங்களில் 48 லட்ச ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.

Update: 2019-05-18 10:51 GMT
புதுச்சேரியில் சாலை விதிமீறல் அபராதமாக கடந்த 4 மாதங்களில் 48 லட்ச ரூபாய் வரை வசூலிக்கப்பட்டுள்ளது. அதிவேகம், செல்போனில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட விதிமீறல்களால் வாகன விபத்துகள் தொடர்கின்றன. அதனால் உடனடி அபராதம் விதிக்கும் முறையை புதுச்சேரி அரசு கொண்டு வந்தது. இந்த  நிலையில் கடந்த 4 மாதங்களில் மட்டும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 47 ஆயிரத்து 958 பேரிடமிருந்து 48 லட்ச ரூபாய் வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்