21 சீக்கிய ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம்

சீக்கியர்களின் புனித நூலை சுற்றி வந்து ஆசி பெற்ற மணமக்கள்

Update: 2019-05-13 12:13 GMT
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 21 சீக்கிய ஜோடிகளுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது. மகாராஷ்டிரம், தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இந்த 21 ஜோடிகளும் பாரம்பரிய பஞ்சாபி முறைப்படி திருமண ஆடைகள் அணிந்திருந்தனர். மணமகன்கள் காவி டர்பன்கள் அணிந்திருந்தனர். குருத்வாரா சாகிப்பில் இருந்து  திருமணம் நடைபெற்ற விளையாட்டு அரங்கிற்கு மணமக்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். இவர்களுக்கு ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு, மணமக்கள், அங்கு வைக்கப்பட்டிருந்த தங்களது புனித நூலை சுற்றி வந்து ஆசி பெற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்